Tuesday, May 4, 2010

Lyrics of the song Naan Pogiren Melae melae from the movie Naanayam

Song:Naan pogiraen maelae maelae
Movie:Naanayam
Singers:S.P.Balasubramanium,K.S.Chithra
Lyricist: Thamarai
Music Director:James Vasanth

நான் போகிறேன் மேலே மேலே
பூலோகமே காலின் கீழே
விண்மீன்களின் கூட்டம் என் மேலே
பூ வாளியின் நீரை போலே
நீ சிந்தினாய் எந்தன் மேலே
நான் பூக்கிறேன் பன்னீர் பூ போலே
தடுமாறி போனேன் அன்றே உன்னை பார்த்த நேரம்
அடையாளம் இல்லா ஒன்றை கண்டேன் நெஞ்சின் ஓரம்
ஏன் உன்னை பார்த்தேன் என்றே உள்ளம் கேள்வி கேட்கும்
ஆனாலும் நெஞ்சம் வந்து நேரத்தை நேசிக்கும்

கண்ணாடி முன்னே நின்றே
தனியாக நான் பேச
யாரென்னும் ஜன்னல் தாண்டி பார்த்தால் ஐயோ
உள்பக்கம் தாழ்பாள் போட்டும்
அறையினுள் நீ வந்தாய்
கை நீட்டித் தொட்டுப் பார்த்தேன் காற்றை ஐயோ
என் வீட்டில் நீயும் வந்து சேரும் காலம் எக்காலம்
பூ மாலை செய்தேன் வாடுதே
என் மெத்தை தேடும் போர்வை யாவும் சேலை ஆகாதோ
வாராதோ ஆனாலும் இன்று ,ஹானான்


என் தூக்கம் வேண்டும் என்றாய்
தரமாட்டேன் என்றேனே
கனவென்னும் கள்ளச்சாவி கொண்டே வந்தாய்
வார்த்தைகள் தேடி தேடி நான் பேசி பார்த்தேனே
மௌனத்தில் பேசும் வித்தை நீதான் தந்தாய்
அன்றாட போகும் பாதை யாவும் இன்று மாற்றங்கள்
காணாமல் போனேன் பாதியில்
நீ வந்து என்னை மீட்டி செல்வாய் என்று இங்கேயே
கால் நோக கால் நோக நின்றேனே

No comments: