Friday, April 30, 2010

Lyrics of Pookal Pookum from the movie Madarasapattinam

Song: Pookal pookum
Movie: Madarasapattinam
Singers: Roop Kumar Rathod, Harini, Andhrea Jeremiah, G.V Prakash
Lyricist: Na.Muthukumar
Musician: G.V.Prakash

பூக்கள் பூக்கும் தருணம் ஆருயிரே, பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…இது எதுவோ?
இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே பூந்தளிரே!
வார்த்தை தேவையில்லை, வாழும் காலம் வரை, பாவை பார்வை மொழி பேசுமே!
நேற்று தேவையில்லை, நாளை தேவையில்லை, இன்று இந்த நொடி போதுமே!

வேரின்றி விதைன்றி விண்தூவும் மழையென்று இது என்ன இவன் தோட்டம் பூப்பூக்குதே?
வாளின்றி போரின்றி வழிகின்ற இரத்தமின்றி இது என்ன இவனுக்குள் எனை வெல்லுதே?
இதயம் முழுக்க இருக்கும் இந்த தயக்கம், எங்கு கொண்டு நிறுத்தும்
இதை அறிய எங்கு கிடைக்கும் விளக்கம், அது கிடைத்தால் சொல்ல வேண்டும் எனக்கும்
முந்தளிரே……

Oh where would I be without this joy inside of me?
It makes me want to come alive; it makes me want to fly into the sky!
Oh where would I be if I didn't have you next to me?
Oh where would I be? Oh where, oh where?

எந்த மேகம் இது? எந்தன் வாசல் வந்து எங்கும் ஈர மழை தூவுதே!
எந்த உறவு இது? எதுவும் புரியவில்லை என்றபோதும் இது நீளுதே!
யாரென்று அறியாமல், பேர்கூட தெரியாமல், இவளோடு ஒரு சொந்தம் உருவானதே!
ஏனென்று கேட்காமல், தடுத்தாலும் நிற்காமல் இவன் போகும் வழியெங்கும் மனம் போகுதே!
பாதை முடிந்த பிறகும், இந்த உலகில் பயணம் முடிவதில்லையே
காற்றில் பறந்தே பறவை மறைந்து பிறகும், இலை தொடங்கும் நடனம் முடிவதில்லையே!
இது எதுவோ!

பூக்கள் பூக்கும் தருணம் ஆதவனே பார்த்ததாரும் இல்லையே
உலரும் காலை பொழுதை முழுமதியும் பிரிந்து போவதில்லையே
நேற்றுவரை நேரம் போகவில்லையே, உனது அருகே நேரம் போதவில்லையே
எதுவும் பேசவில்லையே, இன்று ஏனோ எதுவும் தோன்றவில்லையே…என்ன புதமை?
இரவும் விடியவில்லையே, அது விடிந்தால் பகலும் முடியவில்லையே
இது எதுவோ!!

No comments: